Thursday, March 29, 2012

எண்ணங்களும் உணர்வுகளும்

அவள் மனம் அறியாமல் இருந்தேன் அன்று
மனம் அறிவேன் இன்று
மாற முடியாமல் தவிக்கிறேன் நின்று

அவள் தவறாய் சொல்லவில்லை
தவறாய் எனக்குத் தோன்றியது
நம்பிக்கை இல்லாததால்

காதலிக்கிறேன் மனதெல்லாம்
தெரிவிக்கவில்லை ஒரு நாள் கூட
என்னவென்பேன் இதனை

சந்தோஷம் குடும்பத்தில் இருக்க
உணர்வு வெளிப்படவேண்டும்
இங்கே உணர்வு ஆழமாய் மறைந்திருக்கு

மனம் தெளிவு படவேண்டும்
எனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
அன்பு வெளிப்பட வேண்டும்
வாழ்க்கை மலர வேண்டும்
இறைவா!! எங்கள் வாழ்வு வளம் பெற
எனக்கு இவற்றைத் தருவாயே
தினம் தினம் வாழ்த்துவாயே...

Friday, July 25, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அன்பால் அவள் என்னை அணைக்க
அவள் உணர்வால் என்னையே மறக்க
ஆசையுடன் அவளை நான் அரவணைக்க
ஆர்வமாய் வாழ்வின் வழி செல்ல
தொடங்குவோம் ஒரு உறவினை
உடல் உயிர் இணையும் மரபினை.

Thursday, July 24, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் கண்களைக் காண காத்திருப்பேன்
கவனமாய் உனக்கென என்னை கோர்த்திருப்பேன்
உன் சிரிப்பில் மகிழ்வடைய காத்திருப்பேன்
சிதறும் எண்ணங்களை சேர்த்திருப்பேன்
உன் உடையினில் மறைய காத்திருப்பேன்
உன்னுடன் கலந்து வாழ நின்றிருப்பேன்.

Wednesday, July 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

காலம் மறந்த காதல்
கடமை மறந்த கண்கள்
என்னை மறக்கும் நான்
உன்னை மறக்கும் நீ
திருமணம் செய்ய காத்திருக்க
நம் எண்ணங்கள் இணைந்திருக்க
பெற்றோரின் ஆசி பெறுவோமே
வாழ்வை வளம்பெற செய்வோமே.

Tuesday, July 1, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பசுமையாம் புல்வெளி
புல்வெளியாம் நம் மனம் -
இனிமையாம் கரும்பு
கரும்பாம் நம் காதல் -
வற்றாததாம் கடல்
கடலாம் நம் அன்பு -
மின்னுவதாம் நட்சத்திரம்
நட்சத்திரமாம் நம் வாழ்வு -
ஒளியாம் கதிரவன்
கதிரவனாம் நம் எண்ணங்கள் -
பசுமை மனம்
இனிமைக் காதலை
வற்றாத அன்புடன்
மின்னும் வாழ்க்கையாய்
ஒளிமயமான எண்ணங்களுள் ஐக்கியமாக்குமாம்
மகிழ்ச்சி மறவா வண்ணங்களை உருவாக்குமாம்

Monday, June 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

சந்திப்பேன் என்று நான் எண்ணவில்லை,
விருப்பமோ சந்திக்க நிலைத்திருந்தது -
காலம் அது கைகொடுக்க
இறைவன் அவன் ஆசிர்வதிக்க
பெற்றோர் அவர்தம் முன்னிலையில்
பயமும் வெட்கமும் கொண்டவளை
விவேகமும் விளையாட்டும் கொண்டவனாம்
கை சேர்க்க - இரு மனமும் பரிமாற -
நாளதுவே கைகூட உள்ளதுவே.

Friday, June 27, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

வெவ்வேறு திசை செல்லும் மனம்
இன்று உன்னை மட்டுமே திசையாய் கொள்கிறதே..
பலப்பல பழக்கங்களை கொண்ட என் உடல்
நாம் நன்றாய் வாழ தீயப் பழக்கங்களை தவிர்க்கிறதே..
சட்டென்று கோபம் வரும் என் உணர்வு
கோபம் குறைத்து அன்பு செழித்து வாழ அழைக்கிறதே..
உருவே வேறாய் உயிரோ ஒன்றாய் பிணைய
காலம் நம் வாழ்வை வழிவகுக்கிறதே..