Monday, June 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

சந்திப்பேன் என்று நான் எண்ணவில்லை,
விருப்பமோ சந்திக்க நிலைத்திருந்தது -
காலம் அது கைகொடுக்க
இறைவன் அவன் ஆசிர்வதிக்க
பெற்றோர் அவர்தம் முன்னிலையில்
பயமும் வெட்கமும் கொண்டவளை
விவேகமும் விளையாட்டும் கொண்டவனாம்
கை சேர்க்க - இரு மனமும் பரிமாற -
நாளதுவே கைகூட உள்ளதுவே.

No comments: