Friday, May 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திருமணம் ஒரு பூட்டா??
ஆம் பூட்டு தான் -
இரு மனங்களை ஒரு மனமாய் பூட்டும் பூட்டு

இந்த பூட்டுக்கு ஒரு சாவி உண்டா??
ஆம் சாவி இருக்கிறது -
அதுதான் காதல் எனும் சாவி

இந்த பூட்டு பழுதுபடாதா??
பழுது படலாம் -
மனங்கள் இரண்டும் அன்பு பாராட்டாமல் இருந்தால்

இந்த பூட்டு பயன் படுமா??
பயன்படத்தான் இந்த பூட்டு -
சாவி சரியாய் பயன்பட்டால்

ஏ பூட்டே.. நீ இரு மனங்களை சேர்க்கிறாய்..
ஆனால் சாவியே உன்னை வாழ வைக்கிறது... அறிவாயே...
சாவி பழுது படாமல் பூட்டுடன் உபயோகித்தால், நீ பேரின்பம் அடைவாய்..
வாழ்வின் உபயோகம் அடைவாய்..

Thursday, May 29, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பேச்சினில் ஒன்றும் இல்லை அவள் புகழைத் தவிர
உறக்கத்தில் ஒன்றும் இல்லை அவள் நினைவைத் தவிர
உடலினில் ஒன்றும் இல்லை அவள் ஊக்கத்தைத் தவிர
உள்ளத்தில் ஒன்றும் இல்லை அவள் அன்பைத் தவிர
என் உலகினில் ஒன்றும் இல்லை அவளைத் தவிர

Wednesday, May 28, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

தேன் நீ என சொன்னால், மயங்கிய தேனி நான் என சொல்வேன்
மலர் நீ என சொன்னால், மொய்க்கும் வண்டு நான் என சொல்வேன்
கடல் நீ என சொன்னால், கடல்வாழ் மீன் நான் என சொல்வேன்
காற்று நீ என சொன்னால், இனிய காற்றோசை நான் என சொல்வேன்
இனிப்பு நீ என சொன்னால், அதிலூரும் எறும்பு நான் என சொல்வேன்
கண் நீ என சொன்னால், உன் கண்மணி நான் என சொல்வேன்
உயிர் நீ என சொன்னால், தோன்றும் உணர்வு நான் என சொல்வேன்
நானே நீ என சொன்னால், நாம் ஓருயிர் என சொல்வேன்

Tuesday, May 27, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

இனிப்பும் காரமும் சேர்ந்து, இருவராய் பகிர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை
--------------------------------------------------------------------------------------
அளவில்லா அமிர்தம், எனக்கு அவள் சொந்தம்

எண்ணங்களும் உணர்வுகளும்

தாய் தந்தையிலே உயிர் பெற்றாய்
கருவிலே உருவம் பெற்றாய்
பிறப்பிலே சுவாசம் பெற்றாய்
காலத்திலே வளர்ச்சி பெற்றாய்
வாழ்விலே முன்னேற்றம் பெற்றாய்
படிப்பிலே தகுதி பெற்றாய்
இப்பொழுது என்னை பெற்றாய்
எப்போதும் இன்பம் பெருவாய்

Monday, May 26, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திசை வேறு, கோணங்கள் வேறு,
உயிர் வேறு, உடல் வேறு - நாம் நினைத்தால்
அகிலமும் வேரூன்றி ஒன்றாகும்

Friday, May 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

கவிதை எழுத காற்றின் ஓசை
கானம் பாட கவியின் திறமை
காதல் செய்ய நமது மனதின் ஒருமை!!

Wednesday, May 21, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அவள் பேச்சினில் ஒரு நிறைவு
தினம் காணாத ஆடவன் மீது ஒரு ஈர்ப்பு
மனம் அது அவனை மறக்க மறுக்கும் ஒரு விருப்பம்
இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு இனிய தொடக்கம்

Tuesday, May 20, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உணர்வு தனில் உண்மை இருக்க
உயிர் தனில் நன்மை வாழ
சொல் தனில் பொய் புரண்டோட
மனம் தனில் தாண்டவம் ஆடுவதே காதல்!!