Friday, July 25, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அன்பால் அவள் என்னை அணைக்க
அவள் உணர்வால் என்னையே மறக்க
ஆசையுடன் அவளை நான் அரவணைக்க
ஆர்வமாய் வாழ்வின் வழி செல்ல
தொடங்குவோம் ஒரு உறவினை
உடல் உயிர் இணையும் மரபினை.

Thursday, July 24, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் கண்களைக் காண காத்திருப்பேன்
கவனமாய் உனக்கென என்னை கோர்த்திருப்பேன்
உன் சிரிப்பில் மகிழ்வடைய காத்திருப்பேன்
சிதறும் எண்ணங்களை சேர்த்திருப்பேன்
உன் உடையினில் மறைய காத்திருப்பேன்
உன்னுடன் கலந்து வாழ நின்றிருப்பேன்.

Wednesday, July 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

காலம் மறந்த காதல்
கடமை மறந்த கண்கள்
என்னை மறக்கும் நான்
உன்னை மறக்கும் நீ
திருமணம் செய்ய காத்திருக்க
நம் எண்ணங்கள் இணைந்திருக்க
பெற்றோரின் ஆசி பெறுவோமே
வாழ்வை வளம்பெற செய்வோமே.

Tuesday, July 1, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பசுமையாம் புல்வெளி
புல்வெளியாம் நம் மனம் -
இனிமையாம் கரும்பு
கரும்பாம் நம் காதல் -
வற்றாததாம் கடல்
கடலாம் நம் அன்பு -
மின்னுவதாம் நட்சத்திரம்
நட்சத்திரமாம் நம் வாழ்வு -
ஒளியாம் கதிரவன்
கதிரவனாம் நம் எண்ணங்கள் -
பசுமை மனம்
இனிமைக் காதலை
வற்றாத அன்புடன்
மின்னும் வாழ்க்கையாய்
ஒளிமயமான எண்ணங்களுள் ஐக்கியமாக்குமாம்
மகிழ்ச்சி மறவா வண்ணங்களை உருவாக்குமாம்

Monday, June 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

சந்திப்பேன் என்று நான் எண்ணவில்லை,
விருப்பமோ சந்திக்க நிலைத்திருந்தது -
காலம் அது கைகொடுக்க
இறைவன் அவன் ஆசிர்வதிக்க
பெற்றோர் அவர்தம் முன்னிலையில்
பயமும் வெட்கமும் கொண்டவளை
விவேகமும் விளையாட்டும் கொண்டவனாம்
கை சேர்க்க - இரு மனமும் பரிமாற -
நாளதுவே கைகூட உள்ளதுவே.

Friday, June 27, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

வெவ்வேறு திசை செல்லும் மனம்
இன்று உன்னை மட்டுமே திசையாய் கொள்கிறதே..
பலப்பல பழக்கங்களை கொண்ட என் உடல்
நாம் நன்றாய் வாழ தீயப் பழக்கங்களை தவிர்க்கிறதே..
சட்டென்று கோபம் வரும் என் உணர்வு
கோபம் குறைத்து அன்பு செழித்து வாழ அழைக்கிறதே..
உருவே வேறாய் உயிரோ ஒன்றாய் பிணைய
காலம் நம் வாழ்வை வழிவகுக்கிறதே..

Thursday, June 26, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

மணமாலை சூடும் முன்னே
உன் மனம் அறிய வேண்டாமோ -
வேண்டுமென நினைத்தேன்
அறியத் தொடங்கினேன் உன்னை

அறிவதோ புது விஷயம்
நானோ விஷமின்றி ஏற்பேனோ -
கசப்புகள் இருந்தாலும் ஏற்பேன்
நல்வாழ்க்கை அது பயனுற

உன் வார்த்தைகள் எண்ணங்களைச் சொல்ல
என் எண்ணங்கள் உன் வார்த்தைகளை உட்கொள்ள
ஏற்றங்களும் ஏமாற்றங்களும் இருவரும் பகிர
தொடங்கியதே உரையாடல் தினம் தினம்

உன் ஆசைகள் ஏமாற்றங்களாய்
என் பேச்சோ உனக்கு கட்டளையாய்
மாறும் புது கோணங்களோ
தொடங்கின சிறு சிதறல்கள்

சிதறல்களை கருதாமல்
கருத்ததனை முன் நிறுத்தி
வாழ்க்கைப் பயணம் தொடர
நீ மகிழ்வுதனை நமக்காக கொண்டாயே

என் விளையாட்டுக்கள் குழப்பங்களாய்
என் பொய்களோ அதன் புன்னகையாய்
உன் நினைவில் அடுத்து இடம் பிடிக்க
நானோ விட்டேன் பொய் அதனை

என் எண்ணங்களை நீ அறிய
உன் எண்ணங்களை நான் அறிய
நம் வாழ்க்கையை வழி நடத்த
நாம் இணைந்தோமே மனமதிலே..
உணர்வோமே இனிய திருமணம் முதலே..

Wednesday, June 25, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் மீது கோபம் கொண்டேன் -
உன் மீது பாசம் உள்ளதனால்;
உன்னைத் திட்டியதால் வருத்தம் கொண்டாய் -
நமக்கிடையே காதல் உள்ளதனால்;
உன்னைத் திட்ட எனக்கென்ன ஆசையா? - இல்லை -
திட்டியதோ உன்னிடம் கொண்ட அன்பின் தூண்டுதலால்;
அறியாயோ என்னை -
மனமது கலந்து உன்னை விரும்புவதை;
உன் எண்ணங்களை என்னிடம் கொள்வதை;
அன்பே -
என் வார்த்தைகள் நமக்கென அறிவாயே.

Tuesday, June 24, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

காலையோ உன் கண்களின் தொடங்க
நாளோ உன் நினைவினில் ஓட
மாலையோ நான் உன் அருகிலிருக்க
இரவோ நாம் இணைய இருக்க -
நேரம் என்னவென மறக்கடிக்கிறாய்
உன் நினைவே நாட்பொழுதென மாற்றியிருக்கிறாய்
அன்பால் என்னைக் கவர்ந்திருக்கிறாய்
அமுதாய் என்னை வாழ வைக்கிறாய்
என் அகிலமாய் நீ மாறி நிற்கிறாய்

Monday, June 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

முன்னே செல்வேன் உன் வழிகாட்டியாய்
உன் பின்னே வருவேன் நீ வழிகாட்ட
உன்னுடன் கோர்ப்பேன் வாழ்க்கைத் தோழனாய்
உயிருடன் கலப்பேன் அன்பின் சீடனாய்
வாழ்வோம் மகிழ்ச்சியில் காதலின் அங்கமாய்

Thursday, June 19, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன்னிடம் நான் காணும் இன்பம் -
மூச்சினில் முளைத்து
மனதில் மறைந்து
சொல்லில் சுவைத்து
வெட்கத்தில் விளையாடி
சிரிப்பில் சிலிர்த்து
மெய்யில் மின்னி
பொய்யில் பிண்ணி
அன்பில் அள்ளி
ஆசையில் ஆடி
பாசத்தில் பகிர்ந்து
காதலில் கறைந்து
உன்னில் உயிர்பெருவதுவே..

Wednesday, June 18, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

வார்த்தைகள் உணர்வற்றதாய் இருக்கலாம்
மனமோ அவ்வண்ணம் இல்லை -
ஆசைகள் நிறைவேறாமல் இருக்கலாம்
அன்போ அப்பொருளரியாமல் இல்லை -
கனவுகள் களைந்து இருக்கலாம்
கண்மணியின் கவலை தெரியாமல் இல்லை -
வண்ணங்கள் கொண்ட வாழ்க்கையில்
எண்ணங்கள் அவதிப் படலாம்
ஆசைகள் நசுக்கப் படலாம் -
அன்பே,
உணர்வுகளும் உள்ளமும் உனக்கே என அறியாயோ -
மனமே,
இன்பம் எனக்கு நீ, உனக்கு நான் என அறியாயோ -
உயிரே,
உன்னிடம் உண்மையாய் இருப்பவனை அணைப்பாயே.

Tuesday, June 17, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

எண்ணங்கள் ஒன்றாக மாறுமோ
மாறினால் நிற்குமோ
நின்றால் நீடிக்குமோ -
கேள்விகள் பலவாய்
பொருளோ ஒன்றாய் நிலைப்பதுவே
காதல் செய்யும் காலம் -
இருவரையும் ஒன்று படுத்தும் காலம்

எண்ணங்கள் ஒன்றாய்
நின்றும் நீடித்தும் -
கேள்விகளே இல்லாமல்
பொருளறிந்து பரிமாரிக்கொள்வதே
திருமணம் செய்யும் காலம் -
இருவரையும் பிரிவில்லாமல் காணும் காலம்

அனைத்தும் ஒன்றாய் நிற்க
காலம் அதை வெல்லும் காலம் -
குடும்பமாய் வாழத்தொடங்கும் பொற்காலம் -
உயிரை உருவாக்கும் காலம் -
ஓர் புது உயிரை இப்புவியில் அறிமுகம் செய்ய

நாட்கள் ஓட ஓட
குழந்தையோ வளர
பொறுப்பை அங்கமாய் கொள்ளும் காலம் -
பெற்றோராய் வாழும் காலம் -
பொறுப்பரியும் காலம் அந்தோ
உயிரை இப்புவியில் வாழ வைக்கும் காலம்

பல வருடமாயினும்
புது உறவாய் வாழும் வசந்த காலம் -
உடல் முதிவை அடைந்தாலும்
மனம் மகிழ்வாய் இருக்கும் காலம் -
கடவுளை அடையவிருக்கும் காலம்

காலங்கள் பலவாயினும்
உயிர்கள் இரண்டே -
அவர்கள் பகிரும் அன்பே
காலங்களை வெல்லும் -
வாழ்வின் பொருளறிய வாழ வைக்கும் -
வெற்றியை அடைய வைக்கும்!!

Wednesday, June 11, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

கடலின் ஓசையில் கேட்காத இன்பம்
காதலியின் சிரிப்பினில் கேட்டேன்
பூங்காற்றின் சுவாசத்தில் இல்லாத இன்பம்
அவளின் வெட்கத்தில் ஈன்றேன் -
காதலின் கூற்றுக்கள் நிலமரியா வானவேடிக்கைகள்தான் -
உறுதியாய் கூறுவேன் -
அவள் என்னுள் வந்துவிட்டாள்
என்னை மாற்றிவிட்டாள்.

Tuesday, June 10, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திருமணம் என்னும் ஆரம்பம் -
அழைத்து வருமே பேரின்பம்;
தொடங்கும் ஒரு குடும்பம் - அதை
வாழ்த்தும் பல சொந்தம்;
புது உறவுகள் வந்திடும் -
இணையும் மனங்களுக்கு
பொறுப்போ இணைந்திடும் -
உறவினர்களின் எதிர்பார்ப்போ
பெரியோரின் ஆசிர்வாதமோ
வெளியே புரண்டோடிடும் -
ஆனந்தம் பரவ
ஆடவனின் பெற்றோரோ
புது உறவை தம்வீட்டிற்கு அழைக்க -
மணப்பெண்ணின் மனமோ
பெற்றோருடன் ஏங்க -
ஆடவனோ அவளை பார்க்க -
பெண்ணோ கண்ணீரில் இருந்திட -
இரு மனம் இணைய
புது உறவை ஏற்றிட
வாழ்க்கை பாதையை நடத்திட
இரு உள்ளங்களும் திடம் இருந்து
புது வாழ்வினை தொடங்கிடுமே -
மகிழ்வை அனைவருக்கும் அளித்திடுமே!!

Monday, June 9, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அகமொன்று வைப்பாய் புறமொன்று பேசுவாய்
நீ ஒருவரை நம்பும்வரை
அகமும் புறமும் ஒன்றாய்ப் பேசுவாய்
நீ ஒருவரை நம்பியதும்
அகம் புறம் அறியாமல் பேசுவாய்
நீ ஒருவரிடம் ஒன்றிய பிறகு
அன்பே.. அகம் புறம் அறியா வாழ்வே
நம்மிடம் ஓங்கட்டுமே..

Friday, June 6, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அம்மாவை நம் பிறப்புக்காக வாழ்த்துவோம்
அப்பாவை நம் வளர்ச்சிக்காக வாழ்த்துவோம்
ஆசிரியரை நம் கல்விக்காக வாழ்த்துவோம்
உறவுகளை நம் பண்பாட்டிற்காக வாழ்த்துவோம்
நண்பர்களை நம் பண்புக்காக வாழ்த்துவோம்
பெரியோரை நம் நடப்புக்காக வாழ்த்துவோம்
நாட்டை நம் சுதந்திரத்திற்காக வாழ்த்துவோம் -
மேலாய் என்னை வாழ வைக்கும் உயிரை வாழ்த்தாமல் இருப்பேனோ!
என் உள்ளம் கவர் கள்ளியே என்னை மகிழ்வாய் வைக்கும் வள்ளியே
உன்னை வாழ்த்தாமல் வாழ்க்கையை அறிவேனோ..

Thursday, June 5, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பிறப்பரியா உறவு
பிரியாத உறவு
பிரியமான உறவு
பிடித்தமான உறவு
பினியழிக்கும் உறவு
அன்பான உறவு
அழவில்லா உறவு
ஆசைதரும் உறவு
ஆனந்தமான உறவு
ஆபத்தில்லா உறவு
உன்னுடன் நான் கொண்ட உறவு
உயிரே அது நம் காதல் உறவு

Wednesday, June 4, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

வார்த்தைகளில் இனிமையும்
பேச்சினில் விளையாட்டும்
உள்ளத்தில் உண்மையும்
எண்ணங்களில் உரிமையும்
பழகுவதில் பொறுமையும்
இளமைப்பேச்சில் குறும்பும்
நாள்பொழுதில் பண்பும்
மாலைக்காலத்தில் தனிமையும்
கனவினில் ஏக்கமும்
கொண்டதே காதல்

Tuesday, June 3, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

கனவில் காண்பது நிஜமானால் நீ எனக்குள் இருக்கிறாய்
அன்பாய் கிடைப்பது தினமானால் நீ எனது உணர்வாகிறாய்
பாசம் அது மிகைவானால் நீ எனக்குள் ஐக்கியம் ஆகிறாய்
மனம் அது ஒன்றானால் நீயே நானாவாய்

Monday, June 2, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உன் கண்களை கண்டதும் என் கண்கள் பூத்திருக்க
உன் கண்ணம் அதனில் கவிதைகள் சேர்ந்து நிற்க
உன் உதடினில் என் உதடு உடனிருக்க
உன் நாவினில் என் நாவு இணைந்திருக்க
உன் செவிகளோ நிலையை அறிந்திருக்க
உன் கரங்களோ என்னை அணைத்திருக்க
உன் முன்னகமோ என்னால் மறைந்திருக்க
உன் பின்புறமோ அனைத்தையும் ஏற்றிருக்க
உன் கால்களோ என் கால்களுடன் நெலிந்திருக்க
உன் பாதங்களோ வெட்கத்தை மறந்திருக்க
உன் உள் உணர்வோ உயிரோடு உறவாட
நாம் இணைவோம் வாழ்வுதனை ஒன்று சேர்க்க..

Friday, May 30, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திருமணம் ஒரு பூட்டா??
ஆம் பூட்டு தான் -
இரு மனங்களை ஒரு மனமாய் பூட்டும் பூட்டு

இந்த பூட்டுக்கு ஒரு சாவி உண்டா??
ஆம் சாவி இருக்கிறது -
அதுதான் காதல் எனும் சாவி

இந்த பூட்டு பழுதுபடாதா??
பழுது படலாம் -
மனங்கள் இரண்டும் அன்பு பாராட்டாமல் இருந்தால்

இந்த பூட்டு பயன் படுமா??
பயன்படத்தான் இந்த பூட்டு -
சாவி சரியாய் பயன்பட்டால்

ஏ பூட்டே.. நீ இரு மனங்களை சேர்க்கிறாய்..
ஆனால் சாவியே உன்னை வாழ வைக்கிறது... அறிவாயே...
சாவி பழுது படாமல் பூட்டுடன் உபயோகித்தால், நீ பேரின்பம் அடைவாய்..
வாழ்வின் உபயோகம் அடைவாய்..

Thursday, May 29, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

பேச்சினில் ஒன்றும் இல்லை அவள் புகழைத் தவிர
உறக்கத்தில் ஒன்றும் இல்லை அவள் நினைவைத் தவிர
உடலினில் ஒன்றும் இல்லை அவள் ஊக்கத்தைத் தவிர
உள்ளத்தில் ஒன்றும் இல்லை அவள் அன்பைத் தவிர
என் உலகினில் ஒன்றும் இல்லை அவளைத் தவிர

Wednesday, May 28, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

தேன் நீ என சொன்னால், மயங்கிய தேனி நான் என சொல்வேன்
மலர் நீ என சொன்னால், மொய்க்கும் வண்டு நான் என சொல்வேன்
கடல் நீ என சொன்னால், கடல்வாழ் மீன் நான் என சொல்வேன்
காற்று நீ என சொன்னால், இனிய காற்றோசை நான் என சொல்வேன்
இனிப்பு நீ என சொன்னால், அதிலூரும் எறும்பு நான் என சொல்வேன்
கண் நீ என சொன்னால், உன் கண்மணி நான் என சொல்வேன்
உயிர் நீ என சொன்னால், தோன்றும் உணர்வு நான் என சொல்வேன்
நானே நீ என சொன்னால், நாம் ஓருயிர் என சொல்வேன்

Tuesday, May 27, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

இனிப்பும் காரமும் சேர்ந்து, இருவராய் பகிர்ந்து வாழ்வதுதான் வாழ்க்கை
--------------------------------------------------------------------------------------
அளவில்லா அமிர்தம், எனக்கு அவள் சொந்தம்

எண்ணங்களும் உணர்வுகளும்

தாய் தந்தையிலே உயிர் பெற்றாய்
கருவிலே உருவம் பெற்றாய்
பிறப்பிலே சுவாசம் பெற்றாய்
காலத்திலே வளர்ச்சி பெற்றாய்
வாழ்விலே முன்னேற்றம் பெற்றாய்
படிப்பிலே தகுதி பெற்றாய்
இப்பொழுது என்னை பெற்றாய்
எப்போதும் இன்பம் பெருவாய்

Monday, May 26, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

திசை வேறு, கோணங்கள் வேறு,
உயிர் வேறு, உடல் வேறு - நாம் நினைத்தால்
அகிலமும் வேரூன்றி ஒன்றாகும்

Friday, May 23, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

கவிதை எழுத காற்றின் ஓசை
கானம் பாட கவியின் திறமை
காதல் செய்ய நமது மனதின் ஒருமை!!

Wednesday, May 21, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

அவள் பேச்சினில் ஒரு நிறைவு
தினம் காணாத ஆடவன் மீது ஒரு ஈர்ப்பு
மனம் அது அவனை மறக்க மறுக்கும் ஒரு விருப்பம்
இது அவர்களின் வாழ்க்கையின் ஒரு இனிய தொடக்கம்

Tuesday, May 20, 2008

எண்ணங்களும் உணர்வுகளும்

உணர்வு தனில் உண்மை இருக்க
உயிர் தனில் நன்மை வாழ
சொல் தனில் பொய் புரண்டோட
மனம் தனில் தாண்டவம் ஆடுவதே காதல்!!

Friday, February 1, 2008

A few thoughts..

A few thoughts that came across in my mind, and those I am interested to save for the future, have been put across here.

Wound, it is; and pain, it is. And as time flies, the painful wound turns into a painless scar. Welcome the Magic of Time!

A night and a day has passed after the light dimmed on me.

She is good. She is awesome. And so she is amongst the stars at an unreachable distance.

Never a choice was available. How daring I am to opt for an unavailable choice.

In the days to come, I would carve an art in me, rather than searching for the sculptor.

Love is circumstantial.

A guy and a gal make an ideal pair, when they appreciate their strengths and make adjustments for their weaknesses.

A couple enjoy their relationship when they accept their life together with mutual understanding and by giving up for each other's happiness enlightening a happy life.

The girl is in my heart, but I am not. Let the time decide if I need to be.

The sour part of my life was to give up my dreams on my girl, but it let me get the sweetest girl as my partner.

என்னால் நமக்கிடையே மௌனம்.. இது இனி வேண்டாமே!

அவள் பேச்சினில் கண்டது மாற்றம், எனக்கோ அதில் ஏமாற்றம்.


All the thoughts emerging from the 30th of January, 2008.