Thursday, March 29, 2012

எண்ணங்களும் உணர்வுகளும்

அவள் மனம் அறியாமல் இருந்தேன் அன்று
மனம் அறிவேன் இன்று
மாற முடியாமல் தவிக்கிறேன் நின்று

அவள் தவறாய் சொல்லவில்லை
தவறாய் எனக்குத் தோன்றியது
நம்பிக்கை இல்லாததால்

காதலிக்கிறேன் மனதெல்லாம்
தெரிவிக்கவில்லை ஒரு நாள் கூட
என்னவென்பேன் இதனை

சந்தோஷம் குடும்பத்தில் இருக்க
உணர்வு வெளிப்படவேண்டும்
இங்கே உணர்வு ஆழமாய் மறைந்திருக்கு

மனம் தெளிவு படவேண்டும்
எனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்
அன்பு வெளிப்பட வேண்டும்
வாழ்க்கை மலர வேண்டும்
இறைவா!! எங்கள் வாழ்வு வளம் பெற
எனக்கு இவற்றைத் தருவாயே
தினம் தினம் வாழ்த்துவாயே...

No comments: